திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கரும்பூர் என்ற பகுதியில் இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1992-93-ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் ஒருவரையொருவர் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் அவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை  மற்றும் பரிசுப் பொருட்களை கொடுத்து ஆசிர் பெற்றனர். இதனையடுத்து சிறுவயதில் பள்ளி பருவத்தில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் நடந்து கொண்ட விதம் பற்றியும், ஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பு காட்டி கல்வி கற்றுத்தந்த விதம் குறித்தும் அனுபவங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கொண்டனர்.