கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. நூறு சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கொள்ளையடிக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

நகைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏசி வென்டிலேட்டர் மூலம் கடைக்குள் நுழைந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் சண்முகம் தலைமையில் 3 தனி படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.