கோவை மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பர் 28 முதல் ஜனவரி 30 வரை சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு 8.43 மணிக்கு வந்தடையும்.

அதன் பிறகு அங்கிருந்து 8.45 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு 9.53 மணிக்கு வந்தடையும். பிறகு 9.55 மணிக்கு புறப்பட்டு காலை 11.23 மணிக்கு சேலம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு சேலத்தில் இருந்து 11.25 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாராந்திர சிறப்பு ரயில் எட்டு பெட்டிகளுடன் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.