மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் வாக்கு சேகரித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார்.கோவை தொகுதியில் பாஜக அபார் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதை யாராலும் தடுக்க முடியாது என்று சூளுரைத்த அவர், ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகள், நெசவாளர்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் உறுதியளித்தார்.