கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் பிரிந்து இருப்பதால் தான் பாஜக வெற்றி பெறுகிறது. அதனால் தான், பிரிந்து கிடந்த கட்சிகளை ஒருமைப் படுத்தினேன் என்று தெரிவித்தார்.