தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். வேனில் இருந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டதில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.