நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சுடையாம்பட்டி புதூரில் கட்டிட வேலை பார்க்கும் டேவிட் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி டேவிட் அதே பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சரவணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே மூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் டேவிட் ஓட்டி சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் டேவிட், சரவணன், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பூவரசன், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவரான கௌதம், மோகன் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டேவிட், சரவணன், கௌதம் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.