கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் வர்ஞ்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பது தெரியவந்தது. அவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பழனிவேல் ரயில் மோதி இறந்தது தெரியவந்தது.