தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முதுகம்பட்டி பகுதியில் திம்மராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் அழகாபுரம் பகுதியில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முதுகம்பட்டி அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து திம்மராயன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திம்மராயன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.