உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதார்நாத் கோவிலின் விரைவில் மொபைல் ஃபோன்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்துக்களின் மிக முக்கியமான புனித தளங்களில் ஒன்றான கோதார்நாத் கோவில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.இங்கு நிலவும் வானிலையை பொறுத்து ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி பண்டிகை வரை மட்டுமே இந்த கோவில் திறக்கப்படும். அப்போதுதான் பக்தர்கள் பாதயாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சமீபத்தில் கோதாநாத் கோவில் வளாகத்தில் பெண் ஒருவர் தனது காதலன் முன்பு மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் விரைவில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.