இந்தியாவில் வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் குறிப்பிட்ட குளிர்சாதன பெட்டிகளின் கட்டணத்தை குறைப்பதற்கு ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இருக்கை வசதி கொண்ட ஏசி சேர் கார் போன்ற எக்ஸிக்யூட்டிகளில் வகுப்புகளில் 25 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்படும் என ரயில்வே வாரியம் என்று அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் மட்டுமே நிரம்பிய ரயில்களில் சலுகை கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.