தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிட்டத்தட்ட தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை வரவுள்ளது இதனால் மக்கள் பலரும் விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதன் காரணமாக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் விமான டிக்கெட்டுகளின் விலை கடுமையாக உயர்த்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது இலங்கைக்கு 14 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும், பாங்காக் செல்ல 25 ஆயிரம் முதல் 29 ஆயிரம் ரூபாய் வரையும், சிங்கப்பூருக்கு 20000 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும், துபாய்க்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரத்து 800 ரூபாய் வரையும், டெல்லிக்கு 13,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும், கோவாவுக்கு 7900 முதல் 26 ஆயிரம் ரூபாய் வரையும், லட்சத்தீவுக்கு 23 ஆயிரத்து 500 மற்றும் அந்த மானுக்கு 13,000 முதல் 15,800 வரையும் விமான டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.