பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை பிடித்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறேன் என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் எந்தப் பதவியும் கேட்டு பெற்றதில்லை. மத்திய அமைச்சர், ஆளுநர் ஆகும் இலக்கு இல்லை. ஆளுநர், அமைச்சர் பதவி தேவை என்று நான் கேட்க மாட்டேன்.

என் தகுதி, திறமைக்கு கொடுக்கும் பதவியில் திறம்பட பணியாற்றுவேன். அதிமுக, இரட்டை இலை எங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கழக விதிப்படி வழக்கு நடந்தால் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். மக்களவை தேர்தல் முடிவு அதிமுக இணைப்பை சாத்தியமாக்கும் என கூறியுள்ளார்.