வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். இவர் பல வினோதமான சட்டங்களை இயற்றி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் வெளியில் தெரிய வருவதே கிடையாது. இருப்பினும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் வடகொரியாவில் இருந்து தப்பிய யோன்மி பார்க் என்ற பெண் வங்கதேசத்தின் தி டெய்லி ஸ்டார் ஊடகத்திற்கு அழைத்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது வடகொரிய அதிபருக்காக அந்நாட்டில் தனியாக உல்லாச குழு என்று அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பில் வருடத்திற்கு 25 கன்னி பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு அழகான பெண்கள் கிடைக்கவில்லை என்றால் பள்ளிக்கூடத்திற்கு சென்று தேடுவார்கள். அவர்களுக்கு அழகான பெண்கள் கிடைக்கும் போது முதலில் அந்த பெண்ணின் குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணின் குடும்பத்தினர் வடகொரியாவில் இருந்து வெளியேறி இருந்தாலோ அல்லது அவர்களின் உறவினர்கள் தென்கொரியா அல்லது வேறு ஏதேனும் நாட்டில் இருந்தாலோ அந்த பெண்ணை நிராகரித்து விடுவார்கள். நிபந்தனைகளுக்குப் பிறகு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அவர்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறார்களா என்பது சோதிக்கப்படும்.

அந்த பரிசோதனையில் சிறிய குறைபாடு இருந்தாலும் கூட அவர்களின் நிராகரித்து விடுவார்கள். இந்த பரிசோதனையில் தேர்வு செய்யப்பட்ட பெண்கள் தலைநகர் பியாங்யாங் நகருக்கு அனுப்பப்படுவார்கள். அதன் பிறகு அந்த பெண்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். இதில் ஒரு குழுவுக்கு மசாஜ் பயிற்சியும் மற்றொரு குழுவுக்கு பாடல் மற்றும் நடனம் போன்ற பயிற்சிகளும் வழங்கப்படும். அதன் பிறகு மூன்றாவது குழு அதிபர் மற்றும் மற்ற உயர் அதிகாரிகளுடன் பாலியல் உறவில் இருப்பார்கள்.

இந்த பெண்கள் அவர்களை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் அவர்களின் வேலை. இதேபோன்று வருடம் தோறும் 25 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த குழுவில் உள்ள பெண்களுக்கு 25 வயது ஆகும்போது அவர்களின் பணிக்காலம் முடிவடைந்து விட்டதாக கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார்கள். இதிலும் மிக அழகாக இருக்கும் பெண்கள் மட்டும்தான் சர்வாதிகாரியை திருப்தி படுத்துவார்கள். மற்ற பெண்கள் அதிகாரிகளை திருப்தி படுத்துவார்கள். மேலும் வீட்டிற்கு அனுப்பப்படும் பெண்களில் சிலர் சர்வாதிகாரிகளின் பாதுகாவலர்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்று அந்த பெண் கூறியுள்ளார்.