மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல பெண்களுக்கு வரவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அதற்கு திமுக எம்.பி. கனிமொழி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “பெண்கள் பயன்பெறும் விதமாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. சில பெண்களுக்கு அது கிடைக்கவில்லை. தேர்தல் முடிந்தபின் சிறப்பு முகாம்கள் அமைத்து அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும்” என்று கூறினார். இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.