தமிழகத்தில் போக்குவரத்து கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் செயல்பட்டு வரும் நிலையில் ஊழியர்களுக்கான மாதாந்திர கடனுதவி திட்டம் குறித்து அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த பணியாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

பணியாளர்களின் நலனை கருதி சேமிப்பை ஊக்குவிப்பது மற்றும் கடன் வழங்குவது போன்ற பணிகளை இந்த சங்கம் மேற்கொண்டு வருகிறது. மாதந்தோறும் கடன் தேவைப்படுவோரின் மனுக்கள் பெறப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. இந்த ஏப்ரல் மாதத்திற்கான கடன் மனுக்கள் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.