கோடை காலத்தை முன்னிட்டு சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி எழும்பூரில் இருந்து ஏப்ரல் ஐந்தாம் தேதி இன்று, ஏப்ரல் 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். வரும் மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.