நாட்டிலேயே முதல்முறையாக லோகோ பைலட் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி முதல் கட்டமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தன்னுடைய முதல் ஓட்டுநர் இல்லாத ரயிலை ஆகஸ்ட் மாதம் தொடங்க தயாராகி வருகின்றது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு ரயில் பெட்டியும் அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஆறு ரயில் பெட்டிகளும் வரும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.