தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக என்ற டைட்டானிக் கப்பலை இபிஎஸ் ஓட்ட தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டாரே என பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகர் செந்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பல்வேறு பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், இந்தியா நல்லா இருக்க வேண்டும் என்றால் அது மோடி வந்தா தான் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.