நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் வருவதாக சென்னையைச் சேர்ந்த நந்திகிஷோர் என்பவர் புகார்  அளித்திருந்தார். இந்த நிலையில் அந்நபர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக  காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, நந்திகிஷோரை கொலை செய்துவிட்டதாக ராதேஷ் சியாம் உட்பட 6 பேர் மீது பதியப்பட்டது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இறந்தவரை நேரில் பார்க்கப் பயமாக உள்ளது, கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களைப் பார்த்துக் கொள்கிறேன் என நீதிபதி நகைச்சுவையாக பேசியுள்ளார். மேலும், இந்த வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.