மணிப்பூரில் கலவரத்தின் தாக்கத்தால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்களாக மணிப்பூரில் கலவரம் நீடித்து வருவதால் அங்கு சரக்கு லாரிகள் ஸ்தம்பித்துள்ளதால் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் விலை 1800 ரூபாயை எட்டியுள்ள நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 170 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதனைப் போலவே முட்டை விலை 10 ரூபாய் மற்றும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 100 ரூபாயாக அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.