இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு குழந்தைகளின் அறிவு திறனும் நாளுக்கு நாள் மேம்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட வயதிலேயே சாதனை புரியும் பல குழந்தைகளும் உள்ளன. அதன்படி வயதையும் மீறி அபார நினைவாற்றலால் பல சாதனைகளை படைத்து வருகிறார் 20 மாத குழந்தை சமர்த்தா. மும்பையை சேர்ந்த அர்ஜுன் மற்றும் மகாலட்சுமி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தை விட்டு சென்றுள்ளார் தந்தை.

குழந்தைக்கு மூன்று மாதத்தில் இருந்தே புதிய விஷயங்களை தாய் மகாலட்சுமி கற்பித்துள்ளார். இதனால் பழங்கள், நிறங்கள், பொருள்கள் மற்றும் எழுத்துக்களை துல்லியமாக சொல்லி பல சாதனை புத்தகத்தில் 20 மாத குழந்தை பெயரை இடம்பெற வைத்துள்ளார். இவரின் இந்த சாதனை பலரையும் வியக்க வைத்துள்ளது.