இறந்த மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒன்றரை கோடி செலவில் கோவில் கட்டிய கணவரின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.பண்டல்கன்ட் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பிபி சன்சோரியா என்பவரே இவ்வாறு கோயில் காட்டியுள்ளார்.  மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சன்சோரியாவின் மனைவி கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மனைவியின் ஆசைக்கு இணங்க தற்போது தனது சேமிப்பு பணம் மொத்தத்தையும் செலவு செய்து அவரின் கணவர் கோவில் கட்டியுள்ளார். ராதையும் கிருஷ்ணரும் காதலின் அடையாளமாக இருந்ததால் இந்த கோவிலை கட்டியுள்ளதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.