பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம் என்று இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்தால் பெட்ரோல் நிலையங்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு வரும் வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பக் கூடாது. அந்த வாகன ஓட்டிகளிடம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசலை போடுமாறு அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.