மணிப்பூரில் சமீபகாலமாக பதற்றம் நிலவி வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகள் மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாததால், சப்ளை நிறுத்தப்பட்டு, பல பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், கோழி முட்டை ஆகியவற்றின் விலை உச்சமடைந்துள்ளது.

50 கிலோ அரிசியின் விலை ரூ.900ல் இருந்து ரூ.1800 ஆக அதிகரித்துள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால், கறுப்புச் சந்தையில் சிலிண்டரின் விலையும் ரூ.1800 ஆக உயர்ந்தது. மேலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170 ஆக அதிகரித்துள்ளது.