நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை,  கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது.  இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை கஸ்தூரிக்கு கட்டணம் தெரிவிக்கும் விதமாக தமிழர் முன்னேற்றப் படை  கட்சியின் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இட ஒதுக்கீட்டில் உள்ள குறிப்பிட்ட சாதியினர் பார்க்கும் படத்தால் தான் நீங்கள் உடை நல்ல உடை உடுத்துகிறீர்கள், மேக்கப் செய்து கொள்கிறீர்கள் என்று கடுமையாக பதில் அளித்து இருந்தார்.

மேலும் கஸ்தூரிக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்றும் விமர்சித்திருந்தார் வீரலட்சுமி. இதனை அடுத்து வீரலட்சுமி இந்த வீடியோவுக்கு  கஸ்தூரி பதிலளித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த எக்ஸ்  பதிவில் வீரத்தை பேருல மட்டும் வச்சிக்கிட்டு ஏற்கனவே சில ஓசி சோறு பேர்வழிகள் திரிகிறார்கள் . அடுத்து இன்னும் ஒரு அரைமெண்டல். மூணு நாள் பெரும் படையோட வந்து போராட்டம் பண்ணுவேன் எல்லாம் சொல்லுச்சா. நான் கூட என்னவோ நினைச்சேன். அந்த சொரி சிரங்கு படையை சொல்லி இருக்கு போல அந்த அம்மா என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இதற்கும் ஒரு வீடியோவை போட்டு பதிலடி கொடுத்தார் வீரலட்சுமி. அதில் தேவதாசி முறை இருப்பதாகவே நினைத்துக் கொண்டு தன்னையும் தேவதாசியாகவும் நினைத்துக் கொண்டு சில கருத்து சொல்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல நடிகை கஸ்தூரி தான் என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்று கூறியிருந்தேன் போராட்டம் அறிவித்துள்ளேன் .வருவேன் வெயிட் அண்ட் சீ என்று கூறியுள்ளார்.