தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி தேர்வு முடிவு அடைகிறது. இந்நிலையில் கடந்த மாதம் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று  நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து இன்று  முதல் +2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வு எழுத வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.