தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி தேர்வு முடிவு அடைகிறது.  கடந்த மாதம் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று  நிறைவடைந்தது. இதில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்.  இதனை தொடர்ந்து இன்று  முதல் +2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் வருகின்ற பத்தாம் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. வரும் பத்தாம் தேதி தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணிகள் 21ஆம் தேதி முடிவடைகின்றன. அதனைத் தொடர்ந்து மே ஐந்தாம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.