இந்தியாவின் முதல் காவல்துறை உதவி ஆய்வாளரும், சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளருமான திருநங்கை பிரித்திகா யாஷினி கடந்த மாதம் குழந்தையைத் தத்தெடுக்க டெல்லியில் உள்ள மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் திருநங்கை என்ற காரணத்தினால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.