கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு சனிக்கிழமை தமிழகத்தில்  நடைபெற்றது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக தேர்வர்கள் கூறினார்.

இந்நிலையில் சனிக்கிழமை நடந்த குரூப் 2 தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து TNPSC செயலாளர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனம் தனது பணிகளை அவுட்சோர்சிங் செய்ததும், தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்களை அடுக்காமல் விட்டதுமே குளறுபடிக்கு காரணம் என்று TNPSC விளக்கமளித்துள்ளது. குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.