ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7:00 மணி முதல் மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வந்து வாக்கு வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 70.58 சதவீதம் வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளதாக தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.