மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (பிப்.,28) நிறைவடைகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 15 முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. ஏற்கெனவே கடந்த டிசம்பர் 31 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இனி அவகாசம் நீட்டிக்கப்படாது. இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.