ஓய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் நேற்று  கொடைக்கானல் புறப்பட்டு சென்றுள்ளார். 2015ல் ஜெயலலிதா கொடநாடு சென்ற போது கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா? என்று தமிழக மக்களுக்குக் கேட்கத் தான் தோன்றும் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முதல்வருக்கு எதிராக தற்போது பகிர்ந்து வருகின்றனர்.