தமிழக அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தரமான கல்வியை பெற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு செலுத்தி விடும். 2024-25 ஆம் கல்வியாண்டு தற்போது தொடங்க உள்ள நிலையில் RTE திட்டத்தின் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கான புதிய வழிமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் அந்த மாணவருக்கு அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் RTE இட ஒதுக்கீடு இல்லை என்று தெரிவித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் இந்த சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை அதிக அளவு தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.