தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

அதன் பிறகு தமிழகத்தின் உள் மற்றும் வட மாவட்டங்களில் மே 2 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 39 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்றும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.