புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – விஜயராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் விஜய ராணியும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்துவார்கள். சம்பவத்தன்று எப்போதும் போல் பாலகிருஷ்ணன் மது அருந்திவிட்டு விஜயராணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த விஜயராணி வயலுக்கு  வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் விஜயராணியை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.