சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் கார்டு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிகாம் பட்டதாரியான வனிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று மாலை வனிதாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி சென்று பார்த்த போது சமையல் அறையில் தீ பிடித்து வனிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சமையல் அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் உடல் கருகி வனிதா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சமையல் செய்த போது தீப்பற்றி வனிதா உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.