2 நாள் பயணமாக குடியரசு தலைவரான திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். முதல் நாளான நேற்று காலை மதுரை வந்த இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணத்தில் 2ஆம் நாள் நிகழ்ச்சி நிரலாக இன்று காலை 11:45 மணிக்கு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனிலுள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தது.

அதற்காக கோவையிலிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக அங்கு செல்வதாக இருந்தது. இதனிடையில் மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் தற்போது ரத்துசெய்யப்பட்டது. அதோடு இந்நிகழ்வுக்கு நண்பகல் 12:30 மணிக்கு மேல் அவர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.