திமுக அரசு படிக்க வைப்பதற்கு பதில் குடிக்க வைப்பதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தன்னலத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மதுவினை விற்பனை செய்து, கள்ளச்சாராய கலாச்சாரத்தை உருவாக்கி தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க வைத்து தமிழ் குடியை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார்.