9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்திக்க இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் 9 நாள் பயணமாக வெளிநாடு போகிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.