தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் கிளம்பி சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம் எதற்காக என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த முறை ஸ்டாலின் வெளிநாடு சென்றதற்கு இதுவரை எந்த முதலீடுகளும் வந்ததாக தெரியவில்லை.

ஏற்கனவே துபாய்க்கு குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்று வந்த ஸ்டாலின் தற்போது சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க செல்கிறேன் என்ற பெயரில் மீண்டும் இன்ப சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அவர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.