கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி சென்னை புகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புகர் பகுதிகளுக்கு தினம் தோறும் மின்சார ரயில்கள் ஐந்து முதல் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் பத்து முதல் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை புகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதனைப் போலவே ரயில் நிலையங்களில் எங்கும் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் அட்டைவணைப்படி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.