கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் மையூர் பஞ்சு மாவட்டத்தை பிகாஷ் கர் (28) கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பதறிப்போன சக விளையாட்டு வீரர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவர் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.