நேற்று இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து கோவா செல்ல இருந்தது. ஆனால் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது இது குறித்து பயணிகளிடம் விமானி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது விமானத்தில் இருந்த சாஹில் என்ற பயணி விமானியை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடு்த்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரி உறுதி அளித்துள்ளார்.