இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்காக மத்திய அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 33 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் ஃபேம் 3 திட்டம் கொண்டுவரப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும். இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முடிவடையும் எனவும் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்காக கூடுதலாக பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.