இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக OYO அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மூன்று மாதங்களுக்கு அந்த போட்டி நடைபெறும் நகரங்களில் கூடுதலாக 500 ஹோட்டல்கள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து தங்களுக்கு பிடித்த அணிகளை பார்ப்பதற்காக தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் வசதியான மற்றும் குறைந்த கட்டணத்தில் தங்கும் இடம் கிடைக்கும் எனவும் தற்போது OYO புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.