தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து இன்று காலை அரசு பேருந்து கொண்டு தஞ்சை நோக்கி கிளம்பியது. இந்தப் பேருந்து மானங்கோரை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 25 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி (55) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த விபத்து தொடர்பாக அய்யம்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.