ராமநாதபுரம் மாவட்டம் கொடுங்குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்த்தி என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜா என்பவருடன் ஆர்த்திக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஸ்ரீகாந்துக்கு தெரிய வரவே அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார். இதனால் ஆர்த்தி தன் கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் இளையராஜா அவர்களுடைய நண்பருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்து காட்டு பகுதிக்குள் புதைத்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய கணவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக ஆர்த்தி சுமார் இரண்டரை வருடங்களாக நாடகமாடி வந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தற்போது தகவல் கிடைத்த நிலையில் ஆர்த்தி அவருடைய கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆர்த்தி, இளையராஜா உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதோடு வழக்கில் தொடர்புடைய 2 பேரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.