மதுரை மாவட்டம் தத்தனேரி அருகே 1ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை கொடுத்துள்ளனர். அந்த மருந்தை குடித்த சிறுமி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில் சிறுமி குடித்த மருந்து காலாவதியானதும், அதனால் அந்த சிறுமி இறந்ததாகவும் தெரிய வந்ததுள்ளது.