திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிறியதாக உணவு கடை நடத்தி வருகின்றார். ஆனால் இவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி தினம் தோறும் குடித்து வந்த நிலையில் கடன் வாங்கி அதையும் செலவழித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் குடியை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக குடிப்பதை நிறுத்தி 80 ஆயிரம் ரூபாய் கடனை அடைத்துள்ளார் என்றும் மது அருந்துவதை அவர் கைவிட்டு 100 நாட்கள் ஆகிவிட்டது என்றும் அவருடைய நண்பர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி கொண்டாடி வருகிறார்கள்.